Sunday, 19 August 2018

வரலட்சுமி_பூஜை



வரலட்சுமி_பூஜை


வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைவருக்கும் குரு சாஸ்திரிகளின் நமஸ்காரம் #மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள். 1- சின்ன வாழைக்கன்று இரண்டு 2- தோரணம் (கிடைத்தால்) 3- மாவிலை தோரணத்திற்கு. 4- முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க) 5- சீரியல் மின் விளக்கு. அதை இணைக்க தேவையான extension cord. 6- பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு. 1- அம்மனை வைக்க சொம்பு. 2- காதோலை இரண்டு பக்கமும் வைக்க 3- கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க 4- மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க 5-தாழம்பூ ( கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்) 6- ஜடை அலங்காரம் இப்போது பூக்கடைகளில் கிடைக்கிறது. 7- சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய். 8- சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க 9- புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த) #பூஜைக்கு_தேவையான_பொருட்கள். 1- திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி. 2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு) 3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள் 4- மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள் 5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி 6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு. 7- பஞ்ச பாத்திரம், உத்தரினி. 8- இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள் 9- மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ. 10- அர்க்கியம் விட கொஞ்சம் பால் #நைவேத்தியங்கள். 1-இட்லி 2- அப்பம் 3- வடை (உளுந்து வடை) 4-கொழுக்கட்டை 5-வெல்ல பாயசம் 6- கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு) 7- இதற்கு தேவையான தேங்காய், வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள் #பழ_வகைகள் 1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும். பூஜை முடிந்த பின், அர்க்கியம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும். பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும். மறு நாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்கவும். அம்மன் வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம். #விக்னேஸ்வர_பூஜை உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: ஃ ஓம் அனந்தாய நம: ஃ ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம். கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்| ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே|| மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே|| - என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி ஃ ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி ரூ என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும். இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி| ” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்) ” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்) ” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்) ” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்) புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும். ஓம் சுமுகாய நம: | ஓம் ஏகதந்தாய நம: | ஓம் கபிலாய நம: | ஓம் கஜகர்ணாய நம: | ஓம் லம்போதராய நம: | ஓம் விகடாய நம: | ஓம் விக்னராஜாய நம: | ஓம் விநாயகாய நம: | ஓம் தூமகேதவே நம: | ஓம் கணாத்யக்ஷாய நம: | ஓம் பாலசந்த்ராய நம: | ஓம் கஜானனாய நம: | ஓம் வக்ரதுண்டாய நம: | ஓம் சூர்ப்பகர்ணாய நம: | ஓம் ஹேரம்பாய நம: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | ஓம் ஸித்திவிநாயகாய நம: | ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும். அம்ருதோபஸ்தரணமஸி | ஓம் ப்ராணாய ஸ்வாஹா | ஓம் அபாநாய ஸ்வாஹா | ஓம் வ்யாநாய ஸ்வாஹா | ஓம் உதாநாய ஸ்வாஹா | ஓம் ஸமாநாய ஸ்வாஹா | ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா | மஹாகணபதயே நம: அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்… பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும். வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப| நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா|| - என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

No comments:

Post a Comment

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? -  ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் =============[[[[[[[[[[=======]]]]]]]]]]]]]]]]]] ...