Monday, 20 August 2018

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - 

ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்

=============[[[[[[[[[[=======]]]]]]]]]]]]]]]]]]

கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.
கற் சிற்பம்
சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.
அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
கற் சிற்பம்
நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும். அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்.
தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறை
"இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள். இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டாப்படுகிறது.
கற் சிற்பம்
ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது"
கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன

கருப்பசாமி பெட்டி எடுப்பு திருவிழா 2018

பரமக்குடி ஸ்ரீ வெள்ளைக்குதிரை கருப்பசாமி அறக்கட்டளை நடத்தும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி பெட்டி எடுப்பு திருவிழா புகைப்படம் ...




















மதுரை கள்ளழகர்க்கு சாற்றப்பட்ட மஞ்சள் நிற பட்டு

பரமக்குடி ஸ்ரீ வெள்ளைக்குதிரை கருப்பசாமி அறக்கட்டளை சார்பாக மாமதுரை கள்ளழகர்க்கு சாற்றப்பட்ட மஞ்சள் நிற பட்டுடுத்தி கிருஷ்ணவதரம் , ராமா அவதாரத்தில் காட்சி அளித்தார்... ஹரி கோவிந்தா....







Sunday, 19 August 2018

வரலட்சுமி_பூஜை



வரலட்சுமி_பூஜை


வரலட்சுமி_பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைவருக்கும் குரு சாஸ்திரிகளின் நமஸ்காரம் #மண்டபத்திற்கு_அலங்காரபொருட்கள். 1- சின்ன வாழைக்கன்று இரண்டு 2- தோரணம் (கிடைத்தால்) 3- மாவிலை தோரணத்திற்கு. 4- முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க) 5- சீரியல் மின் விளக்கு. அதை இணைக்க தேவையான extension cord. 6- பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு. 1- அம்மனை வைக்க சொம்பு. 2- காதோலை இரண்டு பக்கமும் வைக்க 3- கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க 4- மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க 5-தாழம்பூ ( கிடைத்தால் அதை கருக வளையலில் சேர்த்து இரு பக்கமும் வைக்கலாம்) 6- ஜடை அலங்காரம் இப்போது பூக்கடைகளில் கிடைக்கிறது. 7- சொம்பிற்கேற்ப சிறிய தேங்காய். 8- சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க 9- புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த) #பூஜைக்கு_தேவையான_பொருட்கள். 1- திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி. 2- பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு) 3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள் 4- மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள் 5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி 6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு. 7- பஞ்ச பாத்திரம், உத்தரினி. 8- இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள் 9- மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ. 10- அர்க்கியம் விட கொஞ்சம் பால் #நைவேத்தியங்கள். 1-இட்லி 2- அப்பம் 3- வடை (உளுந்து வடை) 4-கொழுக்கட்டை 5-வெல்ல பாயசம் 6- கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு) 7- இதற்கு தேவையான தேங்காய், வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள் #பழ_வகைகள் 1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும். பூஜை முடிந்த பின், அர்க்கியம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம் ஆரத்தி எடுக்கவும். பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும். மறு நாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில் வைக்கவும். அம்மன் வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம். #விக்னேஸ்வர_பூஜை உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: ஃ ஓம் அனந்தாய நம: ஃ ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம். கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்| ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே|| மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே|| - என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி ஃ ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி ரூ என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும். இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி| ” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) ” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்) ” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) ” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்) ” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்) ” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்) புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும். ஓம் சுமுகாய நம: | ஓம் ஏகதந்தாய நம: | ஓம் கபிலாய நம: | ஓம் கஜகர்ணாய நம: | ஓம் லம்போதராய நம: | ஓம் விகடாய நம: | ஓம் விக்னராஜாய நம: | ஓம் விநாயகாய நம: | ஓம் தூமகேதவே நம: | ஓம் கணாத்யக்ஷாய நம: | ஓம் பாலசந்த்ராய நம: | ஓம் கஜானனாய நம: | ஓம் வக்ரதுண்டாய நம: | ஓம் சூர்ப்பகர்ணாய நம: | ஓம் ஹேரம்பாய நம: | ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: | ஓம் ஸித்திவிநாயகாய நம: | ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும். அம்ருதோபஸ்தரணமஸி | ஓம் ப்ராணாய ஸ்வாஹா | ஓம் அபாநாய ஸ்வாஹா | ஓம் வ்யாநாய ஸ்வாஹா | ஓம் உதாநாய ஸ்வாஹா | ஓம் ஸமாநாய ஸ்வாஹா | ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா | மஹாகணபதயே நம: அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்… பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும். வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப| நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா|| - என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

Status Of Temple Construction



For Construction Of  Sri Pathinettam Padi Karuppasamy Temple



மூலஸ்தானத்தில் ஸ்தாபனம்

பதினெட்டாம்படி கருப்பசாமி போற்றி !!!

#கருப்பசாமி_புகழ்மாலை*
பதினெட்டாம்படி கருப்பசாமி போற்றி!

1. அற்புதத் தெய்வமே போற்றி
2. அனைவரையும் காப்பவனே போற்றி
3. அலங்காரப் பிரியனே போற்றி
4. அபிஷேகப் பிரியனே போற்றி
5. அள்ளிமுடிச்ச கொண்டை அழகனே போற்றி
6. அண்டமெல்லாம் இருப்பவனே போற்றி
7. அரிவாள் ஏந்தியவனே போற்றி
8. அகந்தையை அழிப்பவனே போற்றி
9. ஆபத்தில் காப்பவனே போற்றி
10.இல்லத்தைக் காப்பவனே போற்றி
11. ஈடில்லா தெய்வமே போற்றி
12 உருமாலை கட்டியவனே போற்றி
13. உலகைக் காப்பவனே போற்றி
14. உள்ளத்து இருளைப் போக்குபவனே போற்றி
15. உண்மைப் பரம் பொருளே போற்றி
16. ஊக்கம் தருபவனே போற்றி
17. எங்கள் குல தெய்வமே போற்றி
18. என் குருநாதனே போற்றி
19.எந்தன் மனத்தில் இருப்பவனே போற்றி
20. எங்கும் நிறைந்தவனே போற்றி
21. எத்திசையிலும் இருப்பவனே போற்றி
22. எங்களுக்கும் அருளும் கருப்பரே போற்றி
23. ஏழைப் பங்காளனே போற்றி
24. ஐம்பொன் அழகனே போற்றி
25. ஐயனாரின் தோழனே போற்றி
26. ஐஸ்வரியம் தருபவனே போற்றி
27. ஒளிமய மானவனே போற்றி
28. ஒப்பற்ற தெய்வமே போற்றி
29. ஓவியமாய் பிறப்பே போற்றி
30. ஔஷதமானவனே போற்றி
31. கருப்பண்ண சாமியே போற்றி
32. கலியுக மூர்த்தியே போற்றி
33. கண்கண்ட தெய்வமே போற்றி
34. கருணைக் கடலே போற்றி
35. கவலைகளைத் தீர்ப்பவனே போற்றி
36. கல்வியைத் தருபவனே போற்றி
37. கண்ணின் கருமணியே போற்றி
38. காவல் தெய்வமே போற்றி
39. காலமெல்லாம் காப்பவனே போற்றி
40. கார்மேக வண்ணனே போற்றி
41. கீழ்த்திசை பார்த்த நாயகனே போற்றி
42. குண்டலம் அணிந்தவனே போற்றி
43. குழந்தை வரம் தருபவனே போற்றி
44. குதிரை வாகனனே போற்றி
45. குறைகள் தீர்ப்பவனே போற்றி
46. குட்டி நிமித்தம் கேட்பவனே போற்றி
47. குற்றம் பொறுக்கும் குணாளனே போற்றி
48. குருவுக்கும் குருவே போற்றி
49. கூப்பிட்ட குரலுக்கு வருபவனே போற்றி
50. கோடி புண்ணியம் கொடுப்பவனே போற்றி
51. சவ்வாது பூசுபவனே போற்றி
52. சகலகலா வல்லவனே போற்றி
53. சந்தனப் பிரியனே போற்றி
54. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
55. சலங்கை கட்டியவனே போற்றி
56. சர்வகாலமும் காப்பவனே போற்றி
57. சாஸ்தாவின் காவலனே போற்றி
58. சிவனின் அம்சமே போற்றி
59. சிவசக்தி அம்சமே போற்றி
60. சிவவடிவச் செல்வனே போற்றி
61. சுக்குமாந்தடிச் சுந்தரனே போற்றி
62. செங்கீரைச் சிங்கமே போற்றி
63. செல்வம் தரும் செல்வனே போற்றி
64. ஞாயிறு வடிவானவனே போற்றி
65. திருமாலின் தளபதியே போற்றி
66. திங்கட்சடையோனின் தொண்டனே போற்றி
67. நம்பியவர்களின் நாயகனே போற்றி
68. நல்லதைச் செய்பவனே போற்றி
69. நற்புகழ் நல்குபவனே போற்றி
70. நெஞ்சில் நிலைத்தவனே போற்றி
71. நெற்கதிர் விளையச் செய்பவனே போற்றி
72. குதிரைமொழி பகவானே போற்றி
73. பரம்பரையைக் காப்பவனே போற்றி
74. பணியாரப் பிரியனே போற்றி
75. பங்காளிகளைக் காப்பவனே போற்றி
76. படையல் பிரியனே போற்றி
77. பக்தர்களுக்கு அருள்பவனே போற்றி
78. பகைவர்களை நடுங்கச் செய்பவனே போற்றி
79. பதினெட்டாம்படிக் கருப்பரே போற்றி
80. பாச்சோற்றுப் பிரியனே போற்றி
81. போற்றி பல பாட வைத்தவனே போற்றி
82. மாங்கல்யம் காப்பவனே போற்றி
83. முன்னோடிக் கருப்பவரே போற்றி
84. முக்கண்ணன் தளபதியே போற்றி
85. முறுக்குமீசை அழகனே போற்றி
86. முண்டாசு கட்டியவனே போற்றி
87. முள்செருப்பு அணிந்தவனே போற்றி
88. மெய்வடிவானவனே போற்றி
89. ராங்கியத்து ராஜாவே போற்றி
90. ருத்திராட்சம் அணிந்தவனே போற்றி
91. வயிரவன் கோயிலின் வள்ளலே போற்றி
92. வருண தேவன் போற்றுபவனே போற்றி
93. வாரிவழங்கும் வள்ளலே போற்றி
94. வாழவைக்கும் தெய்வமே போற்றி
95. வாழ்வு தருபவனே போற்றி
96. வெற்றிதரும் கருப்பரே போற்றி
97. வெள்ளியங்கி அணிந்தவனே போற்றி
98. வெவ்விய காலனை வீழ்த்துபவனே போற்றி
99. வெண்ணையுண்டோனின் அம்சமே போற்றி
100. வேந்தர்க்கு வேந்தனே போற்றி
101. வேண்டும் வரம் தருபவனே போற்றி
102. வேட்டைப் பிரியனே போற்றி
103. வேலங்குடிக் கருப்பரே போற்றி
104. வேதவடிவானவனின் சீடனே போற்றி
105. வேள்வி வேந்தனின் காவலனே போற்றி
106. வேற்றுமையின்றி அருள்பவனே போற்றி
107. வையம் காக்கும் வள்ளலே போற்றி
108. ஓம் ஸ்ரீ பெரிய கருப்பண சுவாமியே போற்றி போற்றி

பதினெட்டாம்படி கருப்பசாமி போற்றி


T. மோகன்தாஸ்
ஸ்ரீ வெள்ளைக்குதிரை கருப்பசாமி அறக்கட்டளை ,
பரமக்குடி
+91 9686998649

கற்பபேழை ஸ்தாபன நிகழ்ச்சி



இந்த நிகழ்ச்சியானது !

நம் முன்னோர்கள் ஒரு ஆலயம் அமைத்துதான் அதை சுற்றி ஒரு நகரை அமைப்பார்கள் அப்படி ஆலயம் அமைக்கும் பொழுது அந்த நாடும் , நகரமும் எல்ல வளங்களையும் பெற்று , மக்கள் எல்ல செல்வங்களையும் பெற்று இருக்க அந்த ஆலயத்தின் மூலஸ்தானம் அமையும் மைய பகுதியில் பல விதமான மூலிகை மருந்துகள் , புண்ணிய நதி தீர்த்தங்கள் , மிருத்திக்கை என்று சொல்லக்கூடிய புண்ணிய இடங்களில் இருந்து எடுக்கப்படும் மணல்கள் , மேலும் பல பொருள்களைகொண்டு மூலஸ்தானத்தில் ஸ்தாபனம் செய்யும் வைபவம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தற்போது நடைமுறையில் இல்லை , நம் முன்னோர்கள் செய்துவைத்த அரும்பெரும் பொக்கிஷங்கள்

27.7.2018 காலை 7.44 முதல் 8.18க்குள் நடைபெற இருக்கும் கற்பபேழை ஸ்தாபன நிகழ்ச்சி


பரமக்குடி புதுநகரில் அமைந்து கொண்டு இருக்கும் அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பசாமி ஆலயத்தில் நாளை 27.7.2018 காலை 7.44 முதல் 8.18க்குள் நடைபெற இருக்கும் கற்பபேழை ஸ்தாபன நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்து கொண்ட அய்யனின் அருள்பெருமாறு அன்புடன் வேண்டுகிறோம்...


... என்றும் இறைபணியில் 
ஸ்ரீ வெள்ளைக்குதிரை கருப்பசாமி அறக்கட்டளை
பரமக்குடி 
T.Mohandoss



9686998649


பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? - ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்

பிரதிஷ்டைக்குப் பின் கற் சிற்பம் கடவுளாவது எப்படி? -  ஆகம சாஸ்திரத்தின் அற்புதம் =============[[[[[[[[[[=======]]]]]]]]]]]]]]]]]] ...